அரசின் e-Pass எடுக்க‌ -  மிக மிக அவசர‌ம் கருதி  வெளியே செல்ல‌

அரசின் e-Pass எடுக்க‌ -  மிக மிக அவசர‌ம் கருதி  வெளியே செல்ல‌



கொரோனா எனும் கொடூரனால் 21 நாட் களுக்கு நமக்கு வீட்டுச் சிறைவாசம்தான். ஆம் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது கடுமையாக பின்பற்றி வருகிறது அரசாங்கம்.  அந்த கொரோனாவை விரட்ட இதைவிட்டால் வேறு வழியில்லை.  இருந்தபோதிலும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம், மருத்துவம், துக்க நிகழ்வு போன்றவற்றிற்கு வெளியே சென்று வர அரசாங்கம் e-Pass மின் அனுமதிச் சீட்டு வழங்குகிறது. 


திருமணம், மருத்துவம், துக்க நிகழ்வு போன்றவற்றிற்கு செல்ல விரும்புவோர் 8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரேஒரு மிஸ்டு கால் கொடுத்தால் உடனடி யாக மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அலைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.  


1 . இணைப்பினை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும். 
2 . உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை ( OTP ) உள்ளீடு செய்யவும் .     
3 . மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.                       
4 . விண்ணப்ப  படிவத்தினை பூர்த்தி செய்யவும் . 
5 . பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும். 


மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Covid19, epasskki, கொரோனா, கோவிட் 19, விதை2விருட்சம், Corona, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree, 70mmstoryreel


Popular posts